Friday, July 3, 2009

அகதிகள்

விண் உடைந்து வருவாயா?
ஆண்டா?
விம்மி அழும் மனித குல துயர்களை போக்கிட.
மனிதம் மதித்த மண்ணில்
அகதிகள் ஏறாளம்கண்ணீர் துடைக்க வருவாயோ?
இல்லை நீயும் இங்கு பொய்தானோ?
கண்ணை இழந்தான் கணவன்
காலை இழந்தான் காளை
பிள்ளை இழந்தார் பெற்றோர்
சேற்றில் கிடந்தான் தந்தை
தலை இழந்தான் தமையன்
சீரழிந்தாள் தங்கை
செத்து போக சிறையில்
மறைந்த என் உறவுகள் எத்தனையோ?
இவை கண்டு ஆண்டவா
ஓடி ஒழிந்து விட்டாயோ?
நீ என்ன வெறும் கல்தானோ?
உயிர் இழந்து போக
மண்ணை இழந்து
பொன்னை இழந்து
வீடு இழந்து
வேண்டிய சொத்திழந்து
மானம் இழந்து மனதிலே அமைதி இழந்து
உயிர் இருந்தும்
உணர்விருந்தும்
நடைப்பிணங்களாய் மிச்சப்பேர்
தகரக் கொட்டலில் இங்கே.
அகதி முகாம்களில்
ஆண்டவா அல்லலூறும்
என்குலம் வாழ
அருள் தந்திடு இல்லையோ
என்னையும் சேர்த்து
என் குலம் தன்னை மொத்தமாய்
அழித்திடு

No comments:

Post a Comment