Saturday, July 25, 2009

நீரும் எதிர்கால சவாலும்


சனத்தொகை அதிகரித்து செல்லும் போது நீரின் தேவையும் அதிகரிக்கும். விவசாயத்திற்கும், குடிப்பதற்குமான நீர் தட்டுப்பாடாக கிடைக்கும் போது அது பாரதூரமான விளைவை தோற்றுவிக்கும். குடிநீர் மாசடையும் போது நோய்கள் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகிவிடும். விவசாயத்திற்கு போதியளவு நீர் கிடைக்காது விட்டால் உணவு உற்பத்தி வீழ்ச்சியடைந்து நாட்டில் பஞ்சம் ஏற்பட இடமுண்டு.நீரை வீணாக விரையம் செய்தலைத் தவிர்க்க வேண்டும். காலநிலை மாற்றத்துக்கான சூழலை மாசுபடுத்தும் நடவடிக்கைகளை கைவிட்டு சூழலை மேம்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடல் வேண்டும். இதற்கு இயற்கை காடுகளை பேணி வருவதுடன் புதிய காடுகளை அமைத்து சூழல் மாசடைதலை தடுத்தல் வேண்டும். இதற்கு செயற்கை பசளை பாவனையை குறைத்து இயற்கை பசளை வகைகளை பயன்படுத்த வேண்டும். மேலும் நீர்நிலைகள் மாசுபடாத வகையில் கழிவுகள் அகற்றப்படல் அவசியம்.எதிர்காலத்தில் நீர் சேமிப்பு திட்டம் ஒன்றை வகுத்து செயற்படுத்துவதுடன், மழை நீரை சேகரித்து பயன்படுத்தும் நடைமுறைகளை பின்பற்றி நீருக்கான எதிர் கால சவால்களை வெற்றி கொள்வது எமது கைகளில் தங்கியுள்ளது.எனவே நீரின் அவசியத்தினை உணர்ந்து செயற்பட்டால் நீர்ச்சவாலை வெற்றிகரமாக எதிர் கொள்ள முடியும்.

No comments:

Post a Comment