

அமெரிக்காவின் நியூ ஒறிலண்ட் மாநிலத்தின் லூசியானா பகுதியில் பெரும்பாலான கடற்கரைப் பகுதியை கடல் ஆட்கொள்ளவுள்ளதாக புவியியல் நிபுணர்கள் கூறியுள்ளனர். கடல் மட்ட அதிகரிப்பு இதற்கு பிரதான காரணமாகும் புவி வெப்பமாதல் வேகம் அதிகரித்து வரும் நிலையில் துருவப்பனிப்பாறைகள் வேகமாக உருகி வருகின்றன. இதுவே அதிகரித்த வேகத்திலான கடல் மட்டம் உயரக்காரணமாகியுள்ளது. இதே வேகத்தில் கடல் மட்டம் அதிகரித்தால் இந்நூற்றாண்டின் இறுதியுடன் லூசியானாவில் பெரும் பகுதி கடலால் மூடப்படும். 10000 - 13500 சதுர கிலோமீற்றர் பரப்பளவுள்ள பகுதி கடலில் மூழ்கிவிடும் நிலையில் உள்ளது. இது இந்நூற்றாண்டின் இறுதியில் எதிர்பார்க்கப்படுவதாகவும் ஆனாலும் கடல் மட்டம் அதிகரிப்பு எதிர்பார்த்த்தை விட அதிகமாக இருப்பதால் விரைவில் இது நிகழலாம் என புவியியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.


No comments:
Post a Comment